பிரதமர் அலுவலகம்

நூற்றாண்டை நிறைவு செய்த கீதா அச்சகத்திற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 03 MAY 2023 7:49PM by PIB Chennai

கீதா அச்சகம், 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஆன்மீக பாரம்பரியத்தைக் கொண்டு செல்லும் அச்சகத்தின் 100 ஆண்டு பயணம், அபாரமானது, நினைவை விட்டு நீங்காதது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“நல்வாழ்த்துகள்! நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆன்மீக பாரம்பரியத்தைக் கொண்டு செல்லும் கீதா அச்சகத்தின் 100 ஆண்டு பயணம், வியக்கத்தக்கது, நினைவை விட்டு நீங்காதது.”

***

 (Release ID: 1921779)

AP/BR/RR



(Release ID: 1921856) Visitor Counter : 145