பிரதமர் அலுவலகம்

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர்

Posted On: 08 APR 2023 6:16PM by PIB Chennai

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று சென்னை-கோவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

முன்னதாக நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் சென்னை-கோவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு மேற்கொண்டதுடன், குழந்தைகள் மற்றும் ரயில்வே ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய அற்புதமான நகரங்கள் வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் மேம்பட்ட கூடுதல் இணைப்பு வசதியை பெறுகின்றன. ரயிலைக் கொடியசைத்து துவக்கி வைத்து இளைய சமுதாயத்தினரை சந்தித்தேன்.

***.

SM/ES/RS/KPG/DL



(Release ID: 1914957) Visitor Counter : 169