பிரதமர் அலுவலகம்

2022-23 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக எஃகு உற்பத்தியில் சாதனை படைத்ததற்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) நிறுவனத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார்.

Posted On: 02 APR 2023 9:12AM by PIB Chennai

இந்த ஆண்டு 194.09 லட்சம் டன் ஹாட் மெட்டல் மற்றும் 182.89 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்து, கடந்த ஆண்டை விட முறையே 3.5% மற்றும் 5.3% அதிக உற்பத்தி செய்து செய்ல் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

 

ஒவ்வொரு துறையிலும் தற்சார்பை நோக்கி இந்தியா வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதை இது குறிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த அற்புதமான சாதனைக்கு வாழ்த்துக்கள் பல! எஃகு மட்டுமல்ல, நாடு எல்லாத் துறைகளிலும் தன்னிறைவை நோக்கி வேகமாக முன்னேறி வருவதை செய்ல் நிறுவனத்தின்  இந்த உற்பத்தி காட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

**********

AD/CR/DL



(Release ID: 1913049) Visitor Counter : 143