பிரதமர் அலுவலகம்

யுகாதி பண்டிகை கொண்டாட்டத்தில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடுவுடன் பிரதமர் பங்கேற்பு

Posted On: 21 MAR 2023 9:41AM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடுவின் யுகாதி தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“நமது முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் கொண்டாடிய யுகாதி பண்டிகையில் கலந்து கொண்டது பெருமகிழ்ச்சியளிக்கிறது. பல தசாப்தங்களாக அவருடன் பழகி வரும் நிலையில், முக்கிய பண்டிகைகளின் மீதான அவரது ஆர்வம், கலாச்சாரத்தின் மீதான பற்று ஆகியவற்றை நான் அறிந்துள்ளேன்.”

***

 (Release ID: 1909009)

SRI/PKV/RR/KRS



(Release ID: 1909015) Visitor Counter : 155