நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜூலை – செப்டம்பர் மாத காலாண்டுக்கான பொதுக்கடன் மேலாண்மை அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 27 DEC 2022 12:09PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழுள்ள பொதுக்கடன் மேலாண்மைப் பிரிவு, பட்ஜெட் பிரிவுடன் இணைந்து, 2010 – 2011 ஏப்ரல் - ஜூன் (முதல் காலாண்டு) பொதுக்கடன் மேலாண்மை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. தற்போது, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டின் (2023-ஆம் நிதியாண்டின் 2-ஆம் காலாண்டு) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2023-ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டின்போது, மத்திய அரசு பங்கு பத்திரங்கள் மூலம் ரூ. 4,06,000 கோடி பணத்தை திரட்டியது. இது, முந்தைய ஆண்டில் ரூ.4,22,000 கோடியாக இருந்தது. அதேசமயம், ரூ.92,371.15 கோடி திருப்பி செலுத்தப்பட்டது. 2023-வது நிதியாண்டின் முதல் காலாண்டில் முதன்மை வெளியீடுகளின் சராசரி வரவு 7.23% ஆக இருந்த நிலையில், 2-வது காலாண்டில் 7.33%ஆக இருந்தது. புதிதாக வெளியிடப்பட்ட பங்கு பத்திரங்களின் சராசரியான முதிர்வு, 2023-ஆம் நிதியாண்டின், 2-ஆம் காலாண்டில் 15.62 என்ற அளவில் இருந்தது. இது 2023-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 15.69 என்ற அளவில்  இருந்தது. பண மேலாண்மை மசோதாக்கள் மூலம் 2022 ஜூலை - செப்டம்பர் வரை எந்த தொகையையும் மத்திய அரசு  திரட்டவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி, காலாண்டில், அரசாங்கப் பத்திரங்களுக்கான திறந்த சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பணப்புழக்கத்தை சரி செய்யும் வசதியின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியின் தினசரி நிகர பணப்புழக்கம், விளிம்புநிலை வசதி மற்றும் பணப்புழக்க வசதி ஆகியவை, காலாண்டில் ரூ.1,28,323.37 கோடியாக இருந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886817

**************

PKV/RB/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1886831) வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Telugu