பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை அறிவித்துள்ளார்
Posted On:
24 DEC 2022 9:47AM by PIB Chennai
பீகார் மாநிலம் மோதிஹரியில் செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் காயமடைந்தோருக்கு ரூ. 50,000 கருணைத் தொகையையும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
" மோதிஹரியில் செங்கல் சூளை விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதற்காகக் கவலை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தோருக்காகப் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 கருணைத் தொகை வழங்கப்படும்: PM @narendramodi"
**************
SM/SMB/DL
(Release ID: 1886255)
Visitor Counter : 180
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam