பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி உரை

Posted On: 31 OCT 2022 8:43PM by PIB Chennai

குஜராத்தின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து மேம்பாட்டுக்கும் இன்று முக்கியமான நாள். அகல ரயில் பாதையின்றி, சிக்கல்களை சந்தித்த லட்சக்கணக்கான குஜராத் மக்கள் இன்று முதல் அந்த சிக்கல்களிலிருந்து விடுபட போகின்றனர். சிறிது நேரத்திற்கு முன்பு அசர்வா- உதய்பூர் இடையிலான ரயிலை அசர்வா ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. லுதீயானாவிலிருந்து ஜெடல்சர் வரை அகல ரயில்பாதையில் செல்லும் ரயில்களும் இன்று கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டன.

நண்பர்களே,

இன்றைய நிகழ்ச்சி இரண்டு ரயில்வே திட்டங்கள் தொடர்பானது மட்டுமல்ல. இந்த திட்டங்கள் எவ்வளவு சிக்கலானது என்பதையும் அவை எப்படி  வெற்றிகரமாக முடிக்கப்பட்டன என்பவையும் குஜராத்திற்கு வெளியில் உள்ள மக்கள், எளிதில் யூகித்து உணரமுடியாது. இந்த திட்டங்கள் நிறைவடைய பல தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அதிர்ஷ்டகரமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

நண்பர்களே,

அகல ரயில் பாதையில்லாத ரயில் வழித்தடம் தனித் தீவு போன்றது. அது இணையதளம் இல்லாத கணினியைப் போன்றது. காட்சிக்கான இணைப்பு இல்லாத தொலைக்காட்சியைப் போன்றது.  நெட்வொர்க் இல்லாத கைப்பேசியைப் போன்றது.  இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள், நாட்டின் பிற மாநிலங்களுக்கு செல்ல இயலவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து இங்கு ரயில்கள் வர இயலவில்லை. இப்போது இந்த ரயில் வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளது. மீட்டர் கேஜ் ரயில்கள் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது இங்கிருந்து செல்லும் ரயில்கள் நாட்டின் எந்தப்பகுதிக்கும் செல்ல இயலும்.

நண்பர்களே,

மீட்டர் கேஜ் பாதைகள் அகலரயில்பாதைகளாக மாற்றப்படும் போது, புதிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அசர்வாவில் இருந்து உதயப்பூர் வரையிலான 300 கிலோ மீட்டர்  ரயில் வழித்தடத்தை அகல ரயில்பாதையாக மாற்றுவது மிகவும்  சிக்கலாக இருந்தது.  தற்போது இது, அகலரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் தில்லி மற்றும் வடஇந்திய பகுதிகளுடன் இணைக்கப்படும். இந்த அகல ரயில்பாதை மூலம் அகமதாபாத் மற்றும் தில்லிக்கு மாற்றுப்பாதையும் தற்போது கிடைத்துள்ளது. சுற்றுலா தலங்களான கட்ச் மற்றும் உதய்பூருக்கு நேரடி ரயில் இணைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் இதன் மூலம் பெரிய பயனடைவார்கள்.

பவநகர், ராஜ்கோட், போர்பந்தர் போன்ற நகரங்களுக்கான பயண தூரமும் இதன் மூலம் குறைகிறது.

நண்பர்களே,

புதிய வழித்தடம் திறக்கப்பட்ட பிறகு பவநகர் போர்ப்பந்தர் இடையிலான பயண தூரம் 200 கிலோ மீட்டராக குறையும். பவநகர், ராஜ்கோட் இடையிலான பயண தூரம் 30 கிலோமீட்டராக இருக்கும். தேசிய ஒற்றுமை தினத்தின் போது இந்த திட்டத்தை தொடங்கிவைப்பது  மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

நண்பர்களே,

இரட்டை என்ஜின் அரசு, செயலாக்கும் போது, அதன் தாக்கம் இரு மடங்காக அல்லாமல், பன்மடங்கு பயன்களை அளிக்கிறது. இங்கு ஒன்றும் ஒன்றும் இரண்டாக இல்லாமல், பதினொன்றாக மாறுகிறது. குஜராத்தின் ரயில் கட்டமைப்பு மேம்பாடே அதற்கு சிறந்த உதாரணம். 2000-2014ம் ஆண்டு காலகட்டத்தில், 125 கிலோமீட்டருக்கும் குறைவாகதான் குஜராத்தில் இரட்டை ரயில்பாதைகள் அமைக்கப்பட்டன. 2014-2022 காலகட்டத்தில் 550 கிலோமீட்டர் தூரத்திற்கு இருவழி ரயில்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.  அதேபோல், 2009-14ம் ஆண்டு காலகட்டத்தில்  குஜராத்தில் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே ரயில் வழித்தடங்கள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டன. 2014-2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ரயில் வழித்தடங்கள் குஜராத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

பல ஆண்டுகளாக ஏழை, பணக்காரர், நகர்ப்புறம், கிராமப்புறம் போன்ற இடைவெளிகளும் சமச்சீரற்ற வளர்ச்சியும்  நாட்டிற்கு பெரும் சவால்களாக இருந்து வந்தன. இந்த சவால்களுக்கு தீர்வு காண நமது அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற தெளிவான கொள்கையுடன், அரசு செயல்படுகிறது. பாதுகாப்பான வீடுகள், கழிப்பறைகள், மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, இலவச சிகிச்சை,காப்பீட்டு வசதிகள் என அனைத்தும் ஏழைகளுக்கு வழங்கப்படுவதை நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இன்று உள்ளது.

சகோதர, சகோதரிகளே,

நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து போன்ற அனைத்திலும் தடையற்ற இணைப்பை ஏற்படுத்தி அனைவருக்கும் பலவகையாக போக்குவரத்து முறைகள் எளிதில் கிடைக்க முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேரமும், பணமும் மிச்சமாகும்.

நண்பர்களே,

குஜராத் மிகப்பெரிய தொழில் மையமாக திகழ்கிறது. இங்கு போக்குவரத்துக்கான செலவும் அதிகமாக இருந்தது. இதனால், தொழில் துறையினர், பிரச்சனைகளை சந்தித்தனர். தற்போது ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமானம், துறைமுகங்கள் போன்ற அனைத்து வகையான இணைப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தின் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நண்பர்களே,

வளர்ச்சி என்பது தொடர்ச்சியான நடைமுறை. வளர்ச்சி இலக்குகள் மலையின் உச்சியைப்போன்றது. மலை உச்சியை அடைந்த பின்னர், முந்தைய மலையை விட உயரமாக மற்றோரு மலை சிகரம் தெரியும். அதற்கான முயற்சிகள் மீண்டும் எடுக்கப்படும். வளர்ச்சிக்கான நடவடிக்கைகளும்  அதுபோன்றது தான். குஜராத் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில்  வளர்ச்சியின் பல உச்சங்களை தொட்டுள்ளது. வரும் 25 ஆண்டுகளில் வளர்ந்த குஜராத் என்ற நிலையை எட்ட  நம்முன் மிகப்பெரிய இலக்குகள் உள்ளன.  கடந்த 20 ஆண்டுகளில் நாம் வளர்ச்சியை எட்டியது போல், இந்த பயணம் தொடர்வதில் குஜராத் மக்கள் பங்கேற்க வேண்டும்.

***

SM/PLM/RS/IDS


(Release ID: 1872982)