பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 20 SEP 2022 10:45PM by PIB Chennai

காசி வித்வத் பரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் சுக்லாவின் மறைவு கல்வி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார உலகுக்கு பேரிழப்பு என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“காசி வித்யாபரிஷத் தலைவர் பேராசிரியர் ராம் யத்னா சுக்லாவின் மறைவு, கல்வி, ஆன்மீகம் மற்றும் கலாச்சார உலகுக்கு <ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவர் சமஸ்கிருத மொழி மற்றும் பாரம்பரிய நூல்களை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றினார். இந்த துயரமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி”.

                                    **********

Release ID: 1861035

 


(रिलीज़ आईडी: 1861406) आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam