மத்திய அமைச்சரவை

இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் – மாலத்தீவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையே பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 SEP 2022 4:03PM by PIB Chennai

இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் – மாலத்தீவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையே பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 2, 2022 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே பேரிடர் மேலாண்மைத் துறையில் தயார் நிலை, நடவடிக்கை, திறன் மேம்பாடு. ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு உதவும்.

ஒப்பந்தம் அம்சங்கள்:

இதன் மூலம் ஒரு நாட்டின் பேரிடரின் போது அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அவசரகால மீட்பு , நடவடிக்கை, மனித நேய உதவி ஆகியவற்றுக்கு மற்ற நாடு உதவும்.

பேரிடர் நடவடிக்கை, திட்டமிடல், தயார் நிலை ஆகியவற்றில் தங்களது அனுபவங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857419

**************



(Release ID: 1857567) Visitor Counter : 162