பிரதமர் அலுவலகம்

"நுவாகாயை" முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 01 SEP 2022 9:04AM by PIB Chennai

நுவாகாய்- அறுவடை பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நுவாகாய் ஜுஹார்!  இந்த சிறப்பு நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நமது நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கும்  உன்னதமான பணியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த நாளை (நுவாகாய் பண்டிகை) கொண்டாடுகிறோம். நமது சமுதாயம் முன்னேற்றத்தில் புதிய உச்சத்தை அடையவும், அனைத்து மக்களும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சி அடைவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”.


***************

(Release ID: 1855884)
 



(Release ID: 1855958) Visitor Counter : 147