பிரதமர் அலுவலகம்
கிஷ்ட்வார் விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவிப்பு
Posted On:
31 AUG 2022 8:52AM by PIB Chennai
கிஷ்ட்வார் விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தல ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“கிஷ்ட்வாரில் நேரிட்ட விபத்தை அறிந்து மிகவும் துயரடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும்: பிரதமர் @narendramodi”
**************
(Release ID: 1855695)
Visitor Counter : 149
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam