பிரதமர் அலுவலகம்

திரு குல்தீப் ராஜ் குப்தாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 18 AUG 2022 10:28PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த திரு குல்தீப் ராஜ் குப்தாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மக்களின் நலன் மற்றும் சமூக வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை திரு குல்தீப் ராஜ் குப்தா அர்ப்பணித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“ஜம்மு காஷ்மீரின் பிரபல பா.ஜ.க தலைவர் திரு குல்தீப் ராஜ் குப்தாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் நலனுக்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இறைவன் வலிமை அளிக்கட்டும். ஓம் சாந்தி!”

***

(Release ID: 1853007)



(Release ID: 1853066) Visitor Counter : 165