மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி மத்திய அரசு கொண்டாடியது

Posted On: 16 AUG 2022 11:41AM by PIB Chennai

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மத்திய அரசு கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 400 சிறப்பு மிக்க இடங்களில் கொண்டாடப்பட்டது.

மத்திய மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், உத்திரப்பிரதேச மாநில அரசுடன் சேர்ந்து 15ம்தேதி ஆக்ராவில் உள்ள ஜல்காரி பாய் சிலை அருகே இந்த நிகழ்ச்சியை கொண்டாடியது.

மத்திய அரசின் சார்பில் மத்திய மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


 (Release ID: 1852178)



(Release ID: 1852201) Visitor Counter : 139