பிரதமர் அலுவலகம்

மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்ட அனைவரையும் நினைவுகூர்ந்தார் பிரதமர்

Posted On: 09 AUG 2022 9:35AM by PIB Chennai

மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:

 

“மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த அனைவரையும் நினைவுகூர்கிறேன்.”

 

“பம்பாயில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் துவக்கத்தில் பங்கேற்ற மகாத்மா காந்தியின் புகைப்படத்தை இங்கே பகிர்கிறேன். (நேரு நினைவு சேகரிப்பிலிருந்து எடுக்கப்பட்டது)”

 

“ஆகஸ்ட் 9, நம் நாட்டு புரட்சி, பற்றி எரியும் சின்னமாக மாறியுள்ளது என்று லோக்நாயக் ஜே.பி. தெரிவித்தார்.

 

மகாத்மா காந்தியால் எழுச்சிபெற்று, ஜே.பி., டாக்டர் லோஹியா உள்ளிட்ட தலைசிறந்த தலைவர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்றனர்.”

 

***************



(Release ID: 1850180) Visitor Counter : 205