பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2022 5:24PM by PIB Chennai

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது:

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பயனுள்ள கல்விப் பயணத்தில் முன்னேற அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வரும் காலங்களில் இந்த இளைஞர்கள் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவார்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன்”

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1844022) வருகையாளர் எண்ணிக்கை : 184