பிரதமர் அலுவலகம்

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 16 JUN 2022 3:00PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று (16.06.2022) ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:

“இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு அமைப்பின் 30-வது ஆண்டை நாம் கொண்டாடிவரும் வேளையில், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சிறப்பான கலந்துரையாடல் மேற்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.  

                                 *****

Release ID: 1834682



(Release ID: 1834744) Visitor Counter : 108