பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 07 JUN 2022 9:26PM by PIB Chennai

ராஜஸ்தானின் பார்மரில் நிகழ்ந்த சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“ராஜஸ்தானின் பார்மரில் நேரிட்ட சாலை விபத்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர தருணத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும்: பிரதமர்” 

*****************

(Release ID: 1831924)



(Release ID: 1831985) Visitor Counter : 126