நிதி அமைச்சகம்

பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார்

Posted On: 06 JUN 2022 6:44PM by PIB Chennai

சீனா தலைமையில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 வது கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார்.  இக்கூட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பு அறிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய திருமதி நிர்மலா சீத்தாராமன், அனுபவங்கள் குறித்து  உரையாடுதல், பரிமாறிக்கொள்ளுதல், நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை தெரிவித்தல் ஆகியவற்றில்  பிரிக்ஸ் அமைப்பு தொடர்ந்து செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு குறித்து பேசிய நிதியமைச்சர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும் முதலீடும்  தொடர்ந்து உதவி புரியும் என்று தெரிவித்தார். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831610 

 

***************



(Release ID: 1831630) Visitor Counter : 164