பிரதமர் அலுவலகம்
பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2022 12:06PM by PIB Chennai
பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அடிமட்டத் தலைவராக பேராசிரியர் பீம் சிங் ஜி நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"பேராசிரியர் பீம் சிங், ஜம்மு மற்றும் காஷ்மீரின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அடிமட்டத் தலைவராக நினைவுகூரப்படுவார். அவர் மிகவும் நன்றாகப் படித்து, புலமை பெற்றவர். அவருடனான எனது கலந்துரையாடல்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவால் பெரிதும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி."
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1829695)
வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam