பிரதமர் அலுவலகம்

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்


பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

Posted On: 22 MAY 2022 10:21AM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கப்படும் என்று திரு மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகரில் ஏற்பட்ட சாலை விபத்து, மிகவும் வேதனைக்குரியது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த பேரிழப்பை ஏற்றுக் கொள்ளும் வலிமையை இறைவன் அவர்களுக்கு அளிக்கட்டும். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்: பிரதமர் @narendramodi

“உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்.

***********



(Release ID: 1827338) Visitor Counter : 138