பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேச தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 07 MAY 2022 1:55PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :    

"மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பட்ட தீ விபத்து, மிகுந்த வருத்தமளிக்கிறது.  துயரமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

****



(Release ID: 1823486) Visitor Counter : 163