ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை இந்திய ரயில்வே தொய்வின்றி தொடர்ந்து தொடர்கிறது

Posted On: 25 APR 2022 1:58PM by PIB Chennai

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக, நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரயில்கள் மற்றும் பெட்டிகளுக்கான நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்துள்ளது.

நிலக்கரி போக்குவரத்தை இந்திய ரயில்வே அதிகப்படுத்தியுள்ளதன்  விளைவாக செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை 32% அதிக நிலக்கரி சரக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022-க்குப் பிறகு சரக்கு போக்குவரத்தில் 10% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டில் இந்திய ரயில்வே மூலம் நிலக்கரி போக்குவரத்து சாதனை அளவில் 111 மில்லியன் டன்கள் அதிகரித்து, 653 மில்லியன் டன் நிலக்கரி எனும் அளவை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 542 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் 20.4% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் மின் துறைக்கு நிலக்கரி எடுத்து செல்வது வெறும் 2 காலாண்டுகளில் 32% அதிகரித்துள்ளது.

மின் துறைக்கு நிலக்கரியை எடுத்து செல்வதற்கு முன்னுரிமை அளிக்க ஏப்ரல் 2022-ல் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது,  ஒரு வார காலத்திற்குள் 10%-க்கும் அதிக அளவில் நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க இது வழிவகுத்தது.

இந்திய ரயில்வே மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819798

***************


(Release ID: 1819865)