திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

ஒரே நாளில் 700-க்கும் அதிகமான இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதமரின் தேசிய தொழிற்பழகுநருக்கான பயிற்சி பயிலரங்கை திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்; தொழிற்பயிற்சியை தேசிய அளவிலான இயக்கங்களில் பங்களிக்கும் வகையில் உருவாக்குவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Posted On: 21 APR 2022 3:04PM by PIB Chennai

பிரதமரின் திறன் இந்தியா இயக்கத்திற்கு  உத்வேகம் அளிக்கும் வகையில், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் திரு  தர்மேந்திர பிரதான், இன்று  ஒரே நாளில் நாடுமுழுவதிலும் உள்ள 700-க்கும் அதிகமான இடங்களில் தேசிய தொழிடப்பழகுநருக்கான பயிற்சியை டிஜிட்டல் முறையில் தொடங்கி வைத்தார்.

மின்சாரம், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள், மின்னணுவியல், வாகனங்கள் மற்றும் பிற தொழில்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட துறைகளிலிருந்து 4000-க்கும் கூடுதலான நிறுவனங்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான  தேர்ச்சி சான்றிதழ், திறன் பயிற்சி சான்றிதழ், தொழிற் பயிற்சி நிறுவனங்களின் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த்ஸ் பயிலரங்கில்  பங்கேற்க தகுதியுடையவர்கள். ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிற்பழகுநர் பயிற்சி பெறும்  பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்படுவதை ஊக்குவிப்பதும், பயிற்சி மற்றும் நடைமுறை திறன்கள் மூலம் அவர்களின் திறனைக் கண்டறிந்து மேம்படுத்துவதில் பணி வழங்குவோருக்கு  உதவுவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கூடுதலாக, இளம் மற்றும் ஆர்வமுள்ள பணியாளர்களுக்கு வெல்டர், எலக்ட்ரீஷியன், ஹவுஸ் கீப்பர், பியூட்டிஷியன், மெக்கானிக் உட்பட 500-ம் மேற்பட்ட வர்த்தகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசின்  மாதாந்திர உதவித்தொகையுடன் ஸ்பாட் அப்ரண்டிஸ்ஷிப் சலுகைகள் வழங்கப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818682

***************



(Release ID: 1818713) Visitor Counter : 121