பிரதமர் அலுவலகம்

அமேதியின் கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 18 APR 2022 11:47AM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்தித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்து மிகவும் சோகமானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்:
PM @narendramodi"

 

******



(Release ID: 1817725) Visitor Counter : 185