சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கைப் பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 25 FEB 2022 10:11AM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நாளை காலை 10.00 மணிக்கு தொடங்கி வைப்பார். பிரதமரின் உரை தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், இ-சஞ்சீவனி, தொலை தூர மன நலத் திட்டம் ஆகிய தலைப்புகளில் மையப் பொருள் அமர்வுகள் காலை 10.45 மணியிலிருந்து பிற்பகல் 13.50 மணி வரை நடைபெறும்.

சுகாதாரத் துறையில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈடுபடுத்துவது இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும். பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்குகளுக்கான முக்கியத்துவத்தைப் பிரதமரின் உரை ஏற்படுத்தும். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நித்தி ஆயோக், தொழில் துறை, புதிய தொழில்கள் போன்றவற்றைச் சேர்ந்த முக்கிய உரையாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் குழு விவாதம், கலந்துரையாடல், அமர்வுகள் இடம் பெறும்.

கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால் ஆகியோர் இணைந்து தலைமை தாங்குவார்கள்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800969

 

****



(Release ID: 1800969)



(Release ID: 1801002) Visitor Counter : 197