கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கடலோர நீர்வழிகள் மூலம் சரக்குப் போக்குவரத்து

Posted On: 08 FEB 2022 2:23PM by PIB Chennai

நீர்வழிகள் மூலம் போக்குவரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிட்டியுள்ளது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் கடலோர நீர்வழிகள் மூலம் சரக்குகள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கடலோர நீர்வழிகள் இணைக்கப்பட்ட,  தேசிய நீர்வழிகள் மூலம் சரக்குப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. 2014-15- காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2020-21-ல் இது 2.76 மடங்கு அதிகரித்துள்ளது.

 தேசிய நீர்வழிகள் குறித்த  உள்நாட்டு நீர்வழிகள் போக்குவரத்து  வளர்ச்சி விகிதம்  2009-2010-ம் ஆண்டு முதல் 2013-14 ஆண்டு வரை  1.5 சதவிகிதமாக இருந்தது.  இந்த வளர்ச்சி விகிதம் 2020-21 ஆண்டில் 13.5 சதவீதமாக உள்ளது.  இது 2019-20- விகிதத்தை விட அதிகமாகும்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர்  திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***************



(Release ID: 1796596) Visitor Counter : 138