வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொலிவுறு நகரங்கள்: ரூ 1,88,507 கோடி மதிப்பிலான 6,721 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 07 FEB 2022 3:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

பொலிவுறு நகரங்கள் இயக்கம் (ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன்) இந்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. ஜனவரி 2016 முதல் ஜூன் 2018 வரை 4 சுற்று போட்டிகள் மூலம் 100 ஸ்மார்ட் சிட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பொலிவுறு நகரங்கள் இயக்க வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசு ₹48,000 கோடி நிதியுதவியை ஐந்தாண்டுகளில் வழங்கும். அதாவது ஒரு நகரத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக ₹100 கோடி வழங்கப்படும். மாநில அரசு/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மூலம் சமமான தொகை அளிக்கப்படும்.

21 ஜனவரி 2022 நிலவரப்படி, இந்த ஸ்மார்ட் சிட்டிகளால் ₹1,88,507 கோடி மதிப்பிலான 6,721 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளன; ₹1,62,908 கோடி மதிப்பிலான 6,124 திட்டங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ₹ 58,735 கோடி மதிப்பிலான 3,421 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

21 ஜனவரி 2022 நிலவரப்படி, இந்திய அரசு 100 ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹28,413.60 கோடியை வெளியிட்டுள்ளது, இதில் ₹23,668.27 கோடி (83%) பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் கூடுதல் நகரங்களைச் சேர்ப்பதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:


(Release ID: 1796197) Visitor Counter : 152