பிரதமர் அலுவலகம்
போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஆண்டனியோ கோஸ்டாவிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
31 JAN 2022 8:02PM by PIB Chennai
போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள திரு. ஆண்டனியோ கோஸ்டாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, போர்ச்சுகல் நாட்டுடனான அன்பான மற்றும் காலத்தால் அழிக்க முடியாத நட்புறவை வலுப்படுத்தி, தொடர வேண்டுமென்ற தமது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
”போர்ச்சுகல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள அபார வெற்றி மற்றும் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் @antoniocostapm-க்கு வாழ்த்துகள். போர்ச்சுகல் நாட்டுடனான அன்பான மற்றும் காலத்தால் அழிக்க முடியாத நட்புறவை வலுப்படுத்தி, தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1794685)
வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam