பிரதமர் அலுவலகம்
கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தியதில் நாட்டில் முதலிடம் பெற்றிருப்பதற்காக இமாச்சலப் பிரதேச முதலமைச்சரைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
06 DEC 2021 2:18PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குடிமக்களில் தகுதியானவர்களுக்குக் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தியதில் நாட்டில் முதலிடம் பெற்றிருப்பதற்காக இமாச்சலப் பிரதேச முதலமைச்சரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெய்ராம் தாக்கூரின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;
"@ஜெய்ராம்தாக்கூர்பிஜேபி அவர்களுக்கு வாழ்த்துக்கள். கொவிடுக்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த தேசத்தின் முன்னால் இமாச்சலப் பிரதேச மக்கள் மிகச்சிறந்த உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் புதிய இந்தியாவுக்கு இம்மக்களின் உணர்வு புதிய பலத்தை வழங்கும். "
***
(Release ID: 1778445)
Visitor Counter : 196
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam