பிரதமர் அலுவலகம்
மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு புகழாரம்
Posted On:
11 NOV 2021 9:18AM by PIB Chennai
மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் முன்னோடி சிந்தனையாளர் எனவும், அறிவுஜீவி எனவும் பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இது குறித்து சுட்டுரையில், பிரதமர் கூறியிருப்பதாவது:
”மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். அவர் முன்னோடி சிந்தனையாளர் மற்றும் அறிவுஜீவி. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. கல்வித்துறையில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சமூகத்தில் சகோதரத்துவத்தை மேம்படுத்த அவர் பணியாற்றினார்”.
••••
(Release ID: 1770905)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam