சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 106.14 கோடியைக் கடந்தது

प्रविष्टि तिथि: 31 OCT 2021 9:33AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 68,04,806 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 106.14 கோடியைக் (1,06,14,40,335) கடந்தது. 1,05,30,690 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,667 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,36,55,842 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.20 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 126  நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,830 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து தற்போது 1,59,272 ஆக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.46 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,35,142 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 60.83 கோடி கொவிட் பரிசோதனைகள் (60,83,19,915) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 37 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.18 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.13 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 62 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 27 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

****


(रिलीज़ आईडी: 1768049) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Malayalam