சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா மாபெரும் சாதனை


நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 21 OCT 2021 11:44AM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனையாக, நாட்டில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடி இலக்கைக் கடந்து விட்டது. இது குறித்து சுட்டுரையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் மற்றும் இந்த பிரம்மாண்டச் சாதனையை அடைந்ததற்குப் பணியாற்றிய நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைந்ததற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 17,561 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,34,95,808 என அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.15 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சிகளால், தொடர்ந்து கடந்த 116 நாட்களாக தினசரி கொவிட் பாதிப்பு 50,000க்கும் கீழ் உள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது, இந்த எண்ணிக்கை 1,78,831 ஆக உள்ளது.  கொவிட் சிகிச்சைப் பெறுபவர்களின் சதவீதம் தற்போது 0.52 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

நாடு முழுவதும் கொவிட் பரிசோதனை தொடர்ந்து விரிவாக்கம் செய்யபடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 12,47,506 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 59.57 (59,57,42,218)  கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரப் பாதிப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது. இது கடந்த 118 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. இது  கடந்த 52 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

****



(Release ID: 1765470) Visitor Counter : 270