நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

காரீப் சந்தைப் பருவம் 2021-22 நெல் கொள்முதல் மூலம் இதுவரை சுமார் 30,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

Posted On: 06 OCT 2021 6:47PM by PIB Chennai

2020-21 காரீப் நெல் கொள்முதல், கடந்த 5ம் தேதி வரை, 894.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலுடன் முடிவடைந்தது.  2020-21 ம் ஆண்டு காரிப் கொள்முதல் மூலம் சுமார் 131.14 லட்சம் விவசாயிகள், ரூ.1,68,832.78 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று  பயனடைந்தனர்.

2021-22 ராபி சந்தைப் பருவத்தில், 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக  49.20 லட்சம் விவசாயிகள் ரூ.85,603.57 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்

2021-22 காரீப் சந்தைப் பருவத்தில், கடந்த 5ம் தேதி வரை  2,87,552 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு,  29,907 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.563.60 கோடி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761512

                                                                                     ------



(Release ID: 1761547) Visitor Counter : 210