குடியரசுத் தலைவர் செயலகம்

ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் குடியரசுத் தலைவர்

Posted On: 24 SEP 2021 3:55PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று காலை தனது இரண்டாவது கண்ணுக்கு புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதே ராணுவ மருத்துவமனையில் அவரது முதல் கண்ணுக்கு  கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.



(Release ID: 1757713) Visitor Counter : 191