ஊரக வளர்ச்சி அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: ஒரே வாரத்தில் 2614 சுயஉதவிக்குழு தொழில்முனைவோர்களுக்கு ரூ.8.60 கோடி சமூக நிறுவன கடனுதவி

Posted On: 15 SEP 2021 1:46PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஒரே வாரத்தில் 2614 சுயஉதவிக்குழு தொழில்முனைவோர்களுக்கு ரூ.8.60 கோடி சமூக நிறுவன கடனுதவி  வழங்கியுள்ளது

தொடக்க நிறுவன, கிராமத் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 19 மாநிலங்களில் உள்ள கிராமங்களில் சுயஉதவிக்குழுவினர்  குறுந்தொழில் தொடங்குவதற்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டன.

அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின்போது, தொடக்க நிறுவன கிராம தொழில் முனைவோர் திட்டத்தின் (SVEP) கீழ், செப்டம்பர் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடக்க நிறுவன கிராம தொழில் முனைவோர் திட்டம்,   ஊரக பகுதிகளில் குறுந்தொழில்கள் தொடங்க விரும்பும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு இத்திட்டம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  

இந்நிகழ்ச்சிகளில், பொது நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் பங்கேற்றன.

சமூக நிறுவன கடன் அளிப்பதற்கு முன்பாக, சுயஉதவிக் குழு தொழில்முனைவோர்களுக்கு தொழில்முனைவு குறித்து ஆரம்பக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்களின் தொழில்கள் குறித்து விரிவான திட்டங்களும் தயாரிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில், ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755016

****

 

(Release ID: 1755016)



(Release ID: 1755053) Visitor Counter : 235