பிரதமர் அலுவலகம்

நாகவுர் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல்

Posted On: 31 AUG 2021 12:06PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் நேரிட்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

 



(Release ID: 1750700) Visitor Counter : 236