பாதுகாப்பு அமைச்சகம்

மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்பு

Posted On: 26 AUG 2021 9:44AM by PIB Chennai

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் ஆகஸ்ட் 26-29  வரை நடைபெறும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படை கலந்து கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சியாக மலபார் கூட்டுப் பயிற்சி கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு, இந்தப் பயிற்சியின் நிரந்தர உறுப்பினராக ஜப்பான் கடற்படையும் இணைந்தது. அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் சேர்ந்தது. மேற்கு பசிபிக் கடல் பகுதியில் 25-ஆவது மலபார் கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா நடத்துகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749126



(Release ID: 1749204) Visitor Counter : 274