இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆகஸ்ட் 17-ந் தேதியன்று, பிரதமர், டோக்கியோ 2020 பேராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவினருடன் கலந்துரையாடுகிறார்

Posted On: 16 AUG 2021 11:53AM by PIB Chennai

ஆகஸ்ட் 17-ந் தேதியன்று காலை 11 மணியளவில், பிரதமர் திரு.நரேந்திர மோடி, டோக்கியோ 2020 பேராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவினருடன் கலந்துரையாடவுள்ளார்.

ஒன்பது விளையாட்டுப் பிரிவுகளைச் சார்ந்த 54 பேரா தடகள வீரர்கள் நமது நாட்டின் சார்பாக, இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக டோக்கியோ செல்கின்றனர். பேராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில்  இதுவரை பங்கேற்ற இந்திய குழுக்களில் இதுதான் மிகப் பெரியது. பிரதமர் மேற்கொள்ள உள்ள கலந்துரையாடல் நிகழ்வில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746286

*****

(Release ID: 1746286)



(Release ID: 1746355) Visitor Counter : 210