பிரதமர் அலுவலகம்

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 07 JUL 2021 9:02AM by PIB Chennai

பழம்பெரும் நடிகர் திரு.திலீப் குமார் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மறைவு நமது கலாச்சார உலகத்திற்கு பேரிழப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரைப்பட உலகின் பெரும் ஆளுமையாக திரு.திலீப் குமார் அவர்கள் என்றும் நினைவு கூரப்படுவார். ஈடு இணையற்ற அறிவாற்றல் மிகுந்த அவர், தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்களை மகிழ்வித்தார். அவர் மறைவு, நமது கலாச்சார உலகத்திற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஏராளமான ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.

***



(Release ID: 1733259) Visitor Counter : 199