சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் சுமார் 25.60 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு

प्रविष्टि तिथि: 11 JUN 2021 11:22AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இதுவரை, 25.60 கோடிக்கும் அதிகமான (25,60,08,080) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 24,44,06,096 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 1.17 கோடி (1,17,56,911) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.

மேலும், 38 லட்சத்திற்கும் அதிகமான (38,21,170) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726147

********************


(रिलीज़ आईडी: 1726198) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada