பிரதமர் அலுவலகம்
கான்பூர் சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு
प्रविष्टि तिथि:
09 JUN 2021 8:35AM by PIB Chennai
உத்திரப்பிரதேசம் கான்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1725578)
आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam