ரெயில்வே அமைச்சகம்

மோசமான வானிலையை கடந்து 12 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 969 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை கொண்டு சென்றன

Posted On: 26 MAY 2021 1:45PM by PIB Chennai

இந்தியன் ரயில்வே இதுவரை 17,945 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை, 1080க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் பல மாநிலங்களுக்கு கொண்டு சென்றுள்ளன.

இதுவரை 272 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தங்கள் பயணத்தை முடித்துள்ளன. நேற்று இரவு 12 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 969 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனுடன், புயல் பாதிப்புள்ள கிழக்கு மாநிலங்களில் இருந்து புறப்பட்டு, மோசமான வானிலையையும் கடந்து பயணித்தன.

இவற்றில் 3 ரயில்கள் தமிழ்நாட்டுக்கும், 4 ரயில்கள் ஆந்திரப் பிரதேசத்துக்கும், தில்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் கேரளாவுக்கு தலா ஒரு ரயில்களும் புறப்பட்டன

தென் மாநிலங்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் தெலங்கானாவுக்கு விநியோகிப்பட்ட ஆக்ஸிஜன் அளவு தலா 1000 மெட்ரிக் டன்களை கடந்தது.

ஜார்கண்ட் மாநிலம் தனது முதல் ஆக்ஸிஜன் ரயிலை பெற்றது. ரயில் மூலம் ஆக்ஸிஜன் பெறும் 15வது மாநிலம் ஜார்கண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3731, மத்தியப் பிரதேசத்துக்கு 633, தில்லிக்கு 4910, ஹரியானாவுக்கு 1911, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 1653, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 1158, ஆந்திராவுக்கு 929, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 246, தெலங்கானாவுக்கு 1312, ஜார்கண்ட்டுக்கு 38, அசாம் மாநிலத்துக்கு 160 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721848

                                                                                    -----



(Release ID: 1721903) Visitor Counter : 231