சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து அனுப்பப்பட்டுள்ள கொவிட் நிவாரண உதவிகள்

प्रविष्टि तिथि: 20 MAY 2021 4:44PM by PIB Chennai

கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.

2021 ஏப்ரல் 27 முதல் மே 19 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் இணைந்து 13,093 பிராணவாயு செறிவூட்டிகள், 15,801 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 10,425 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.1 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள் ஆகியவற்றை அனுப்பியுள்ளன.

2021 மே 18/19 அன்று  ஒன்டாரியோ (கனடா), ஓமன், மியான்மர்அமெரிக்க இந்திய கூட்டு மன்றம், சர்வதேச இங்கிலாந்து மருத்துவ உதவி ஆகியவற்றிலிருந்து  பெறப்பட்ட முக்கியப் பொருட்கள்:

பிராணவாயு செறிவூட்டிகள்: 219

செயற்கை சுவாசக் கருவிகள்: 500

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதற்காக பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720287

*****************


(रिलीज़ आईडी: 1720336) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Malayalam