ரெயில்வே அமைச்சகம்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய ரயில்வே: மாநிலங்களின் பயன்பாட்டிற்காக 64000 படுக்கைகளுடன், 4000 தனிமை சிகிச்சைப் பெட்டிகள் தயார்

Posted On: 01 MAY 2021 3:06PM by PIB Chennai

கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்தில் நாட்டின் செயல் திறனை வலுப்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம், தனது பல முன்முயற்சிகளுள் 64000 படுக்கைகளுடன் 4000 தனிமைப்படுத்தும் பெட்டிகளை தயார் செய்துள்ளது.

இந்தப் பெட்டிகள், தேவைக்கு ஏற்ப சுலபமாக பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரும் வசதிக் கொண்டவை.

அந்தவகையில், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது 2990 படுக்கைகளுடன் 191 பெட்டிகள் கொவிட் சிகிச்சைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, இந்தப் பெட்டிகள் தில்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாநிலங்களில் தற்போது 61 கொவிட் நோயாளிகள் இந்தப் பெட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். கூடுதலாக 2929 படுக்கைகள் இங்கு இருப்பு உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு கோரிக்கை ஏதும் முன்வைக்காத நிலையிலும்ஃபைசாபாத், பதோஹிவாரணாசி, பரேலி, நசீபாபாத் ஆகிய பெருநகரங்களில் மொத்தம் 800 படுக்கைகளுடன் தலா 10 பெட்டிகள் (மொத்தம் 50 பெட்டிகள்நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715321

-----



(Release ID: 1715405) Visitor Counter : 136