தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கொரோனா தொற்று காரணமாக மூத்த இந்திய தகவல் தொடர்பு அதிகாரி திரு மாணிகாந்த் தாகூர் மறைவு

Posted On: 25 APR 2021 2:02PM by PIB Chennai

மூத்த இந்திய தகவல் தொடர்பு அதிகாரியான திரு மாணிகாந்த் தாகூர், கொவிட்-19 தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவர் தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஊடகத் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்தார். தமது 30 ஆண்டுகால பணியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம், அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் செய்திப் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் சேவையாற்றினார்.

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் செய்திப்பிரிவில் தலைமைச் செய்தியாளர் போன்ற முக்கிய பொறுப்பையும் அவர் வகித்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் செய்தி பிரிவுகள், இந்திய பிரஸ் கிளப் உள்ளிட்ட அமைப்புகளின் உயர் அதிகாரிகள் திரு தாகூரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த உத்தரகாண்டின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு நாகேந்திர கௌசலையும்  இந்திய தகவல் தொடர்பு  அதிகாரிகள் நினைவுக் கூர்கிறார்கள்.

இரு அதிகாரிகளும் பொது சேவையில் தங்களது அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நிபுணத்துவத்திற்காக அனைவரது இதயங்களிலும் நீங்கா இடம் பிடிப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1713934

-----



(Release ID: 1713953) Visitor Counter : 132