பிரதமர் அலுவலகம்

உத்கலா தினமான இன்று ஒடிசா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2021 9:39AM by PIB Chennai

உத்கலா தினம் என்று அழைக்கப்படும் ஒடிசா மாநிலம் உருவான நாளான இன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒடிசா மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “உத்கலா தினம் என்ற திருநாளுக்கு எனது நல்வாழ்த்துகள். ஒடிசாவின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடிசா மக்கள் அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். இந்த மாநிலத்தின் மக்கள் மகிழ்ச்சியும், நல்ல உடல் நலமும் கிடைக்கப் பெறுவார்களாக” என்று கூறியுள்ளார்.

 

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1708854) வருகையாளர் எண்ணிக்கை : 231