சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Posted On: 04 MAR 2021 11:45AM by PIB Chennai

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது

கடந்த 24 மணி நேரத்தில் 17,407 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 9,855 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் 2,765 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று  1,73,413- எட்டியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.55 சதவீதம்.

மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை 7 மணி வரை, 1.66 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

 இவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்கள்  67,90,808 பேர், 28,72,725 சுகாதார பணியாளர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 58,03,856 முன்களப் பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 4,202 முன்களப் பணியாளர்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 1,43,759 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,00,698 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

47வது நாளான நேற்று சுமார் 10 லட்சம் பேருக்கு (9,94,452) தடுப்பூசி போடப்பட்டது

கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702398

**************



(Release ID: 1702514) Visitor Counter : 221