பிரதமர் அலுவலகம்

கர்னூல் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிதி உதவி

Posted On: 15 FEB 2021 4:02PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூலில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

"ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000-ம் கருணைத் தொகையாக வழங்கப்படும்," என்று சுட்டுரைப் பதிவு ஒன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                                                                               *******



(Release ID: 1698148) Visitor Counter : 156