விண்வெளித்துறை
பிரதமரின் தொலைநோக்கு, விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்: டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்
Posted On:
04 FEB 2021 1:41PM by PIB Chennai
மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* விண்வெளித் தொழில்நுட்பத்துக்கான பிரதமரின் தொலை நோக்கு, இத்துறையில் இந்தியாவின் ஆற்றலை வெளிப்படுத்தும். தொழில்நுட்ப மேம்பாட்டில் நாட்டை தற்சார்புடையதாக்கும். விண்வெளி தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரியளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
* விண்வெளித்துறையில் தனியார் துறையை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகளாவிய மையமாக இந்தியா இருக்கும். சமூக மேம்பாட்டுக்கு , விண்வெளித் தொழில்நுட்பங்கள் பயன்படும் வகையில் இந்தியா முக்கியப் பங்காற்றும்.
* பிரதமரின் தொலைநோக்குக் காரணமாக விண்வெளித் தொழில்நுட்பச் சேவைகள், விரைவாகவும், மலிவாகவும் மக்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695085
******
(Release ID: 1695085)
(Release ID: 1695122)
Visitor Counter : 211