சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள பயணிகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்

Posted On: 23 DEC 2020 7:51PM by PIB Chennai

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள பயணிகள் மற்றும் அவர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் குறித்து மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் ஆய்வு மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், கோவா, பஞ்சாப், குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்தடைந்துள்ள பயணிகள் குறித்து திரு பூஷன் ஆய்வு செய்தார்.

காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் தலைமை இயக்குநர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமிகு ஆர்த்தி அஹுஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683124

-----



(Release ID: 1683168) Visitor Counter : 108